|
“சிவதொண்டன் நிலையத்தில் ஆணையாளர்கள் எவருமில்லை”
என்பது சுவாமி வாக்கு. அவ்வாறான ஆணையர் ஒருவர்
இருப்பரேல் அவர் ‘திருவடி’யாய்
வீற்றிருக்கும் சுவாமிகளே என்பது சிவதொண்டன் பணிசெய்யும் தொழும்பர்களின்
திடமான நம்பிக்கையாகும். ஆயினும் இந்நிலையங்களை
உலக ஒழுங்கின்படி நிருவகிப்பதற்கு ஒரு
நிருவாகக் கட்டமைப்பு வேண்டற்பாலதே.
உலக
ஒழுங்கில் சற்றும் பிசகாத சுவாமிகள் சிவதொண்டன் நிலையங்களை
நிருவகிக்கும் பொருட்டுச் சிவதொண்டன் சபையை நிறுவினர்.
சிவதொண்டன் சபையானது இலங்கைச் சனனாயகச் சோசலிசக் குடியரசின்
சபைகளுக்கான சட்டத்தின் (Socities Ordinance), சரத்து 3b
இன்
கீழ்ப் பதிவுசெய்யப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட சபையாகும். |